என் நட்பே
என் நட்பே....!
===============
எத்தனை நாட்கள்
இந்த கருத்த வானின்
நட்சத்திரத்தை எண்ணி
வாழ்க்கையை கடப்பேன்
தூரத்து உறவே
அருகில் வர
மனம் இல்லையா...!
கொஞ்ச நேரம் இதயம்
பேச துடிக்கவில்லையா..!
ஒரு கண்ணில்
பொங்கும் மகிழ்ச்சி...!
மறு கண்ணில்
வழிந்தோடும் கண்ணீர்..!
எதை ஏற்கும்
இந்த இரு கண்ணின்
ஒரு உணர்வு...!
பூட்டிய சிரிப்பை
எப்போது திறக்க
வருவாய் என
வீதியை நோக்கி
விதியை நோக்கி
காத்து கிடக்கிறது
எந்தன் மனது
ஒருமுறை என்னருகில்
வந்துவிடு - யாருமில்ல
மொட்டைமாடியில்
சிந்திய கண்ணீரில்
நீந்தி செல்லும்
ஒற்றை நிலவு
உன்னை அழைக்கிறது
என் நட்பே....!
-J.K.பாலாஜி-