நட்பு-காதல்-பிரிவு -நட்பு

பார்த்த முதல் பார்வையிலேயே
என் உள்ளத்தை கவர்ந்துவிட்டான்
அதன் பின்னே நாங்கள் இனிய
நண்பர்கள் ஆனோம் எங்கள் நட்பும்
எங்களை பிணைத்து காதலர்களாய்
எங்களை மாற்றியது -எங்கள் காதலும்
வளர்ந்தது எங்கள் நட்பின் விதையாய்

இப்போது என்னவன் இல்லை
விதி அவனை பிரித்துவிட்டது
நான் தனிமரம் ஆனேன் -அவன் பிரிவு
என்னை அனலாய் வாட்டியபோதும்
அவன் நினைவில் நான் வாழ்ந்து வருகிறேன்
என் வாழ்வில் அவனன்றி இன்னொருவனுக்கு
இடம் இல்லை; என்றும்
நாங்கள் நட்பில் இணைந்த காதலர்கள்
அந்த நட்பாம் ஓடத்தில்
என் மிஞ்சிய வாழ்வு பயணிக்கும்
இந்த அதிசய உலகாம் கடலினிலே
எங்கள் நட்பு எனக்கு துணை
அது என்னை என்றும் மூழ்கடிக்காது
இந்த சம்சார சாகரத்தில்
நாங்கள் நட்பில் வளர்ந்த காதலர்கள்
எங்களைபிணைத்த இந்த நட்பு
என்றும் எம்மை வாழவைக்கும்
ஒருவர் பிரிந்து ஒருவர் வாழ்ந்தாலும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Mar-17, 9:44 pm)
பார்வை : 188

மேலே