எதையும் எதிர்பாராத நட்பு

மகாபாரதத்தின் நாயகர்களான,
கர்ணன்,துரியோதனின் நட்பு
நட்பின் இலக்கணத்திற்க் கு சான்று !!
மாதா,பிதா,குரு ,தெய்வம் வரிசையை,
பூர்த்தி செய்யும் போற்றுதலுக்குரியோன் நண்பன்.
நட்பும்,நம்பிக்கையும் ஒரே பாதையில் பயணிக்கின்றன.
ரத்த பந்தமாய் இல்லாமல் ,
ரத்த பந்தங்களைவிட வலிமையை கொடுக்கும்
வட்டம் நட்பு வட்டம்!
ஆபத்தில் அழைக்காமல் அரவணைக்கும்
'கை' நட்பின் 'கை'!
மன பாரத்தை சுமக்கும்
'சுமைதாங்கியாய்' நட்பு உள்ளம்!
லட்சியவாதிகளின் லட்சியங்களுக்கு
பின்னால் உள்ளது நட்பின் ஆழம்!
'நட்பு ' எனும் ஆயுதத் தைக் கொண்டு
'நல்லொழுக்கம்' எனும் சிற்பத்தை செதுக்கமுடியும்!
நல்ல நண்பர்களின் இணைப்பில்லாமல் வாழ்வு சிறக்காது!
நட்பை போற்றுவோம்! நலமாய் வாழ்வோம்!!

எழுதியவர் : உமா (23-Mar-17, 1:01 pm)
பார்வை : 1165

மேலே