நம் மறைவிற்கு பின்னும் அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்

🌺ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

🌺 "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
அவனுடையது தான். .

🌺"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
கொடுத்து வாங்க பலரும் தயாராக
இருந்தனர். ஆனால் இவன்
விற்கவில்லை.

🌺 "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே
எரிந்துகொண்டிருந்தது.

🌺"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ
முழுவதுமாக பரவிவிட்டதால் அதை
அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று
எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

🌺வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்
நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

🌺"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று
அலறினான்.

🌺"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து
ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே
ஏன் அழுகிறீர்கள் ?

🌺 "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

🌺"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று
கூறினான்.

🌺 "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

🌺 "அவனது சோகம் அனைத்தும் மறைந்து
மகிழ்ச்சி உண்டானது.

🌺" இப்போது வணிகனும் கூடி இருந்த
கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை
பார்க்க தொடங்கினான்.

🌺" அதே வீடு தான் " ,

🌺 " அதே நெருப்பு தான் " ,

🌺"ஆனால் சில வினாடிகளுக்கு முன்
இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.

🌺 "" சிறிது நேரத்தில் வணிகனின்
இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
ஏன் இப்படி கவலையில்லாமல்
சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த
வீட்டிற்கு முன்பணம் மட்டுமே
வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும்
வரவில்லை.

🌺"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி
பணத்தை தருவானா என்பது சந்தேகமே”
என்றான். .

🌺 "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி
அடைந்தான். மீண்டும் சோகத்தில்
ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப
ஆரம்பித்தான்.

🌺 "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம்
மீண்டும் அவனை வாட்டியது.

🌺"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்
மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
“தந்தையே கவலை வேண்டாம். இந்த
வீட்டை வாங்கிய மனிதன் மிகவும்
நல்லவன் போலும்.

🌺 "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று
உங்களுக்கும் தெரியாது எனக்கும்
தெரியாது.

🌺 "ஆகையால் நான் பேசியபடி முழு
தொகையை கொடுப்பது தான் நியாயம்
என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு
தெரிவித்தான்.

🌺"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக
சந்தோஷம்.

🌺 "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
மீண்டும் காணாமல் போய்விட்டது.

🌺"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று
வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

🌺 " இங்கு எதுவுமே மாறவில்லை

🌺 " அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

" இது என்னுடையது என்று நினைக்கும்
போது அந்த இழப்பு உங்களை சோகத்தில்
ஆழ்த்துகிறது.

" இது என்னுடையது அல்ல என்று
நினைக்கும் போது உங்களை சோகம்
தாக்குவது இல்லை. .

🌺"உலகில் எதுவுமே நிரந்தரமானது
இல்லை.

🌺" ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது
இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

🌺 "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது
வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது
இதைத்தான் நம் நாட்டின் ஆன்மீகமும் சொல்கிறது
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

எதை நீ இழந்தாய்... எதற்காக அழுகிறாய்...
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது....
கடமையை செய்... பலனை எதிர்பாராதே... ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
நம் மறைவிற்கு பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...

எழுதியவர் : கவிழகி செல்வி (23-Mar-17, 5:22 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 235

மேலே