காலத்தின் கோலம்...

வெட்டவெளியில் வெட்கமில்லாது நிர்வாணமாய் நிற்கும் மரங்கள்
தொட்டு விளையாடி அதனோடு காதல்சொல்லும் கானல் காற்று...

உறக்கம் தொலைத்து உதிர்ந்துகொண்டிருக்கும் இலைகள்
ஊசலாடி உளுத்துப்போய் உயிர்துறக்கும் கிளைகள்...

கர்ணணே இருந்திருந்தால்கூட கண்ணீர்விட்டே மடிந்திருப்பான்
வர்ணங்களே மறைந்துவாடும் மரங்களின் தோற்றம்கண்டு...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (23-Mar-17, 8:40 pm)
Tanglish : kaalaththin kolam
பார்வை : 69

மேலே