காலத்தின் கோலம்...
வெட்டவெளியில் வெட்கமில்லாது நிர்வாணமாய் நிற்கும் மரங்கள்
தொட்டு விளையாடி அதனோடு காதல்சொல்லும் கானல் காற்று...
உறக்கம் தொலைத்து உதிர்ந்துகொண்டிருக்கும் இலைகள்
ஊசலாடி உளுத்துப்போய் உயிர்துறக்கும் கிளைகள்...
கர்ணணே இருந்திருந்தால்கூட கண்ணீர்விட்டே மடிந்திருப்பான்
வர்ணங்களே மறைந்துவாடும் மரங்களின் தோற்றம்கண்டு...