புன்னகைப்பூவே புதுத்தென்றலே பூலோக மேனகையே
பாட்டெழுத பல்லவி நானெடுத்தேன்
பல்லவிக்கு புன்னகையில் நீ சரம் தொடுத்தாய் !
கண்ணசைவிற்கு கவிதையில் நான் சொல்லெடுத்தேன்
சொல்லிற்கு இமை கவித்து இலக்கிய எழில் கொடுத்தாய் !
பூவிற்கும் தென்றலுக்கும் பாட்டெழுத நான் கையெடுத்த போது
கைபிடித்து நிறுத்தி புன்னகையால் மறுத்தாய் !
புன்னகைப்பூவே புதுத்தென்றலே பூலோக மேனகையே
உன்னையன்றி வேறெழுதேன் என்று அன்று முதல் ஓர் சபதம் நானெடுத்தேன் !
------கவின் சாரலன்