காதல்
உன் கருங்கூந்தல்
மெல்ல வருடி
இழுத்து இசை
மீட்டும் சப்தத்தில்
முகம் திரும்ப
அகம் அழைக்கும்
செவ்விதழில்
இசை மீட்ட.....!
ம் என்ற சப்தத்தில்
உஸ் என்ற உஸ்னத்தில்
சுவாசித்து செல்கிறது
என் உயிர் ராகம்
இப்பொழுதும் மீட்டுகிறேன்
இதழ் கனிந்த
இதயத்தால் காதலை....!
-J.K.பாலாஜி-