அசோகமித்திரன் என்னும் எழுத்துச்சமுத்திரம்
என்றும் ஓயாத
ஓர் எழுதுகோல்
முதன்முதலாக
முற்றுப்புள்ளி வைத்தது !
காகிதங்களுக்குக்
கர்வத்தைக் கொடுத்த
ஒரு ஸ்பரிசம்
கைநழுவி
காலத்தில் விழுந்துபோனது !
மைத்துளிகளால்
நிரம்பிக் கொண்டிருந்த
ஓர் எழுத்துச்சமுத்திரம்
கடைசியாய்ச் சில
கண்ணீர்த்துளிகளில்
நிறைவு பெற்றது !
*****