அசோகமித்திரன் என்னும் எழுத்துச்சமுத்திரம்

என்றும் ஓயாத
ஓர் எழுதுகோல்

முதன்முதலாக
முற்றுப்புள்ளி வைத்தது !

காகிதங்களுக்குக்
கர்வத்தைக் கொடுத்த
ஒரு ஸ்பரிசம்

கைநழுவி
காலத்தில் விழுந்துபோனது !

மைத்துளிகளால்
நிரம்பிக் கொண்டிருந்த
ஓர் எழுத்துச்சமுத்திரம்

கடைசியாய்ச் சில
கண்ணீர்த்துளிகளில்
நிறைவு பெற்றது !

*****

எழுதியவர் : நவீன் இளையா (24-Mar-17, 11:54 am)
பார்வை : 167

மேலே