கடைசி தருணம்
இறுக்கி அணைத்தால்
இறந்து விடுவேன்
என்று தெரியும்
இருந்தாலும் விட்டு விலகமாட்டேன்
என் உயிரை விட
உன் நிம்மதி முக்கியம்
வலித்துக் கொண்டிருந்தாலும்
புன்னகைப்பேன்
ஏன் என்றால்
நான் என் கணவரின் மடியில் இருக்கிறேன்
என்னங்க
தோட்டத்தில் அமர்ந்து
இருவருக்கும் பிடித்த பாடலை இணைந்து கேட்கலாம்
மிகவும் மகிழ்ச்சியாக தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க
இசையோடு புன்னகை பூக்கிறது அன்றில்களின் முகத்தில்
பிராண நாதனின் தோளில் சாய்ந்து கண் மூடி இசை கேட்டுக்கொண்டிருக்கும் தருணம்
எதிர்பார்க்காமல் சட்டென்று
இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மயங்கி இருப்பதை அவர் அறியவில்லை
என் தலையை வருடுகிறார்
நான் அதை உணர்கிறேன்
அவர் மார்பில் இருந்து சரிந்து மடியில் விழும் வேளை
என் மேலே அவரும் சரிகிறார்
எப்படி அறிந்தார் தெரியவில்லை
என் இறப்பை உணர்ந்து என்னுடனே
கைகளை கோர்த்தபடி
முகத்தில் புன்னகையோடு இருவரும்
மேலே செல்கிறோம்
பிரிவென்பது கிடையாது
மெய்உயிர்களுக்கு
~ பிரபாவதி வீரமுத்து