காதலிக்க நேரமில்லை,

கனவுகளும் கணிசமாய்
கலையாத காலை வேளையில்
படுக்கையுடன் சுருட்டப்படும்
விடைகாணாத தூக்கங்களோடு........,

கண்ணீரும் விம்மல்களும்
துடைக்கப்படும்
அரைகுறையான
குளியலோடு......,

சுறுக்கமில்லாத சட்டையுடன்
கனத்த இதயத்துடன்
கந்தகம் உமிழும்
சாலைகளில்
என் நுரைஈரல்களுள்
தீய.......,

நடமாடும் நடை சவங்களாய்
கள்ளச்சிரிப்புடன்
என் பணிக்கொலை காலங்கள்......,

நிம்மதி பெருமூச்சும் கூட
அநாகரியமாகிப்போகும்
கூட்டத்தை நீங்கி
மாலை சாயுய்ம்
வேளையில்
கந்தகங்கள்
வற்றிப்போகும்
அதே சாலைகளில்
என் மீள் பயணம்......,

நிம்மதி இண்மைகள்
மொய்க்கும் என் இரவுகளில்
கனவுகள் காணல்களாகிப் போகின்றன.......,

நிர்பந்தமாய் இறுக மூடும்
இமைகளின்
ஓரத்தில்
சில நிமிடங்களுக்கு மட்டும்
தஞ்சம் கொள்ளும்
துயில்.......,

இரவின் தேசத்தில்
நானொரு அகதி.....,

மறைத்து வைக்கும்
புன்முறுவல்களுக்கு
அநேக நேரங்களில்
என் உதடுகளில்
இடமிருப்பதில்லை ......,

இதில்
நான்எங்கே
தேடுவேன் .......,
நான்
காதலிக்க
நேரத்தை ..........,
என்
எழுத்துக்களோடு...........,

எழுதியவர் : ஹாதிம் (24-Mar-17, 10:14 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 231

மேலே