கதிர்

பருவமழை பெய்தாச்சு
பயிரெல்லாம் கதிராச்சு

கதிரறுக்க காளையரும்,
கார்கூந்தல் பெண்டீரும்
கழனியிலே இறங்கியாச்சு !!!

எங்கிராம பெண்ணெல்லாம்
கொலவை போட கூடியாச்சு!!!

பூமிக்கும், சாமிக்கும் நன்றி
சொல்லி உற்றாருடன்
என் சொந்தம் கொண்டாடுதிங்கே !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (25-Mar-17, 4:40 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 57

மேலே