கதிர்
பருவமழை பெய்தாச்சு
பயிரெல்லாம் கதிராச்சு
கதிரறுக்க காளையரும்,
கார்கூந்தல் பெண்டீரும்
கழனியிலே இறங்கியாச்சு !!!
எங்கிராம பெண்ணெல்லாம்
கொலவை போட கூடியாச்சு!!!
பூமிக்கும், சாமிக்கும் நன்றி
சொல்லி உற்றாருடன்
என் சொந்தம் கொண்டாடுதிங்கே !!!