விழிகளின் சொந்தக்காரி 555

என்னவளே...

உன் விழிகளின் வீச்சில் சூரியன்கூட
உன்னை தொட யோசிக்கும் வெயிலாக...

புன்னகை பூக்கும் உன்
இதழ்களில்...

பிரியாமல் மெல்லியதாய்
தேன் எடுக்க ஆசையடி...

இடையே இல்லாமல்
இருக்கும்...

உன் இடையை கிள்ளிப்பார்க்க
ஆசையடி எனக்கு...

கதிரவனையும் குளிர வைக்கும்
உன் விழிகளில்...

என் இதழ்கள்
பதிக்க அசையடி...

உன் விழியோரம்
இருக்கும் மச்சம்...

பிரம்மன் உனக்கு வைத்த
திருஷ்டி பொட்டடி...

அழகின் மொத்த உருவமே
வைக்க வேண்டுமடி...

உனக்கு என் கைகளால்
நேர்வகிடில் குங்கும பொட்டு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Mar-17, 9:01 pm)
பார்வை : 195

மேலே