உறங்காத இமைகள் --- குறுங்கவிதை
உறங்காத இமைகள் --- குறுங்கவிதை
உறங்காத இமைகளிலே
உறவாடும் கனவுகளே !
மறக்காத நினைவுகளில்
மலர்கின்ற வாசங்கள் !
பிறக்கின்ற போழ்தினிலே
பிறர்க்காக வாழ்கின்ற
சிறப்பான செயலினாலே
சீராகும் உணர்வுகளும் !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்