போராட்டம் இங்கே புரியாமலா
ஏனிந்த இயலாமை, முயலாமை.!
அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லாமே தெரியும். விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும்
எவ்வளவோ புரியும்.
இருந்தும் தீர்வுகளும் இல்லை, தீர்ப்புகளும் இல்லை.
இதனால் தானோ இங்கே கம்யூனிஸ்ட்கள்,
பின் நக்சலைட்கள், இப்போது மாவோயிஸ்ட்டுகள்.
வெட்கப்பட வேண்டும் நீதியும் காவலும்,
தண்டிக்க உங்களால் முடியவில்லையா.
மாறாக குற்றத்திற்கே துணை போகும்
நீதியையும் காவலையும் யார் நம்புவார்?
ஒரு நாள், காத்திருக்கும் இளைஞர்கள்
ஜகத்தினை அழிப்பர், பாரதி சொன்னது போல.!
அஹிம்சைக்கு பேர் போன இந்தியா இப்படித்தான்
தீவிரவாதத்திற்கு தள்ளப்படுமா, இளைஞர்களால்.
சொல்லுங்கள்.?