செய்யுங்கள், இல்லை செத்து மடியுங்கள்

கோபம் கொப்பளிக்க, வன்மம் நெஞ்சிலேந்த
கொடுமைகளை கண்ணுற்று கலங்கியிருக்கிறது
பாமரக்கூட்டம்,
எதற்கும் துணிந்தவர் இனி இழக்கயேதுமில்லை,
எவர்வரினும் ஆவதொன்றுமில்லைஎனதுணியுமுன்
எதையாவது செய்யுங்கள்,
நீயா, நானா என்று வெட்டி அரசியல்
இனியும் பேசினால் உங்கள் நாக்குகள் துண்டிக்கப்படும்.
வெறுங்கையில் வந்து நின்று சமாதானம் செய்தால்,
உங்கள் வேட்டிகள் உருவப்படும்..
போராட்ட நெருப்பு
ஜுவாலையிலிருந்து பொங்குமுன்
செய்யுங்கள், இல்லை செத்து மடியுங்கள்.!!

எழுதியவர் : செல்வமணி (26-Mar-17, 9:24 am)
பார்வை : 550

மேலே