காதல் மழை

வழக்கம்போல் அன்றும் காலதாமதம்.
விளைவு என் தேவதையின் கோபம்!!

ஆரம்பித்தது ஊடல் வேளை!
காரணம் என் அலுவலக வேலை!!

அவள்-"என்னை நினைப்பதற்கு கூட நேரமில்லையோ?"

நான்-"உன்னை மறந்தால்தானே நினைப்பதற்கு?"

இன்னும் சமாதானம் ஆகவில்லை போலும்,
சிறிது தூரம் நடந்து சென்றாள்.

மின்னல் இடியுடன் மழை!!! அவள் கோபத்தை இயற்கையும் ஆமோதிக்கிறதோ???

பையில் வைத்திருந்த குடையை விரித்தாள்!

கண்களாலேயே அழைப்பு விடுத்தாள்...

நொடிப்பொழுதில் அவளருகில் சென்றேன்...

குடைக்குள் இருந்தும் நனைந்தேன்...

நனைத்தது வான்மழை அல்ல "காதல் மழை"!!!

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா பானு (26-Mar-17, 10:49 am)
Tanglish : kaadhal mazhai
பார்வை : 364

மேலே