சேலையில் அவள்

அன்பே
விரலுக்கு எட்டாத வெண்ணிலவுக்கு
விழிக்கு மட்டுமே நீ எட்டியதால்
எண்ணி எண்ணி ஏங்குதடி
நீ கட்டிய சேலைஆழகை கண்டு!,

எட்டாமல் நீ கட்டிய
எட்டு மடிப்பு சேலை
நீ சொல்லாத உன் அழகினை
என்னிடம் சொல்லாமல் சொல்லி
கொல்லாமல் கொல்லுதடி என்னை,

பூந்தோட்டமே எதுவென்று தெரியாமல்
பூவெல்லாம் தடுமாறுதடி தாரகையே
உன்னை சேலையில் கண்ட பின்பு,

வழித்தேடி செல்லும்
வண்ணத்துப்பூச்சியும் இன்று
விழித்தேடி வந்து விழுந்ததடி
விழியே உன்னை
சேலையை கண்ட பின்பு,

சோலையை தேடிச் செல்லும்
பறவைகள் எல்லாம் இன்று
சோலையை மறந்து சுற்றுதடி
உன் சேலையின் பின்னால்,

பூவாசமும் இன்று புலம்புதடி
உன் பொன்மேனி வாசத்தில்
தோற்றப்பின்பு,

மலர் தொடுக்காத உன் நூலிடையும்
மணக்குதடி மலரே
உன் மஞ்சல் முகத்தினால்,

இதழ்பிரியாத இவளின் சிரிப்பை
இன்னும் ஒருநொடி
காண வேண்டும் என்று
இயங்க முடியாமல் இயற்கை தவிக்க
நிழலும் இங்கு
நீயாக வேண்டும் என்று
மரத்தின் பூக்கள் எல்லாம்
உதிருதடி உயிரே உனக்காக.....
..................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Mar-17, 12:13 pm)
Tanglish : selaiyil aval
பார்வை : 29612

மேலே