கண்ணீரில் கரையும் காதல் இரவுகள் 555

நிலவே...

நீ என்னை பிரிந்த நேரம்
என் விழிகளில் ஈரம்...

கண்ணீர் கரையின் சுவடுகளோடு
இமை சேர்ந்த இரவுகளும்...

உன் காதல் கடிதங்களை நான்
அணைத்துக்கொண்டு உறங்கிய இரவுகளும்...

என் கனவில் நீ
வந்த இரவுகளும்...

விடிந்ததும் வேதனையோடு
விழித்திருந்த இரவுகளும்...

மெழுகின் வெளிச்சத்தில் என்னோடு
நீ உருகிஉருகி பேசிய இரவுகளும்...

இமைமூடும் நேரத்தில் இதயம்
திறந்த இரவுகளும்...

மீண்டும் நம்பிக்கையில்
நனையுதடி என் விழிகள்...

கனவுகளின் கைப்பிடிக்குள் கரையும்
இரவுகள்தான் எனக்கு இனி...

என் காதலின்
கண்ணீர் இரவுகள்...

மரண இரவாகா மாறுமுன்
வந்துவிடுவாயோ என்னிடம்...

மீண்டும் நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Mar-17, 8:38 pm)
பார்வை : 674

மேலே