கிறுக்கல்கள்
விழிகளை மூடி கொண்டு
இறுக்கமான மனதோடு
எதுகை மோனை
இயைபு தொடை
எல்லாமுமாய் ஆன
கவிதையொன்றை தீட்டி முடித்து
கவி ஆணவ செருக்கில்
கண் விழித்து பார்த்தேன்...
கள்ளமில்லா வெள்ளை மனதோடு
மழலை அவள் சிரிக்கவே
நான் எழுதிய கிறுக்கல்கள்
காற்றில் பறந்து போனதாய் ஞாபகம்..
$வினோ...