உரக்கச் சொல்ல வா தமிழா

உதிரும் உதிரம் அது
உனதாய் இருந்திருந்தால்
ஓடித்தான் வந்திருப்பாய்...!
ஒளிந்தா மறைதிருப்பாய் ...?
சிந்தித்துப் பார் ...
சிந்தும் வியர்வையுடன்
அவன் சிதறவிட்ட வித்துகளே
நம் சிறு வயிற்றை இன்று
நிரப்பிக் கொண்டிருக்கிறது..!
உழவனின் உரிமையை
உரக்கச் சொல்ல வா தமிழா ..!
ஊரார்க்கு நன்கு
உரைக்கச் சொல்ல வா ...!

எழுதியவர் : ஜீவா கண்ணன் (27-Mar-17, 10:58 am)
சேர்த்தது : ஜீவா கண்ணன்
பார்வை : 820

மேலே