காதல் ஓய்வதில்லை

நீ தானே முப்பொழுதும்
நான் வாங்கும் மூச்சு
நீயின்றி என் வாழ்வில்
வேறென்ன பேச்சு
உலகம் அழியும் வரையில்
என் காதல் அழியாது
இதயம் உள்ள வரை என்
பந்தம் கெடுவதில்லை
உலர்ந்த பூக்களை கோர்த்து
மாலை தொடுப்பதில்லை
மலர்ந்த பூக்கள் எல்லாமே மாலையவதில்லை
கைகோர்த்த காதலெல்லாம்
கரை சேருவதில்லை
இதில் என் காதலுக்கு மட்டும்
விதிவிலக்கு...
ஏன்....?
நீ என்னை விரும்பவில்லை
என்றலும் நான் உன்னை
விரும்பிக்கொண்டே
இருப்பேன் என் காலம் உள்ளவரை...

எழுதியவர் : செல்வமுத்து.M (27-Mar-17, 12:43 pm)
பார்வை : 109

மேலே