அவளும் நானும்
அழகே...
நான் உன்னைக் காணும்போதுதெல்லாம்
நீயேன் உம்மென்று இருக்கிறாய்...
என்றும் புன்னகை பூக்காத அத்தி பூ போல்...
அன்பே...
இனிப்பு சுவை அறியாத பூனையா நீ?
ஈரெட்டு வயதிலும்..
காதல் சுவை அறியாதிருக்கிறாயே...
ஆதலால்தான் இந்த ஐயம்...!
உயிரே...
ஆனால், நானோ....
தினம் கண்களை மூடி
தூங்க இயலாத மீனாய்...
காதல் கடலுக்குள் வீழ்ந்து வாழ்கிறேன்...
ஏன் இந்த வினோதம்...?