அழுகைக்குரல்

நாய் ஒன்ன அடிச்சா
கேட்க இங்க நாதியிருக்கு
காளையோடு விளையாண்டா
கழுத்தை நெறிக்கும் சட்டமிருக்கு
கூத்தாடிக்கு மேடை போட்டு
குளிப்பாட்ட கூட்டமிருக்கு
வார்த்தையொன்ன ஜாலமாக்கி
வாரிவிட கட்சியிருக்கு
சில்லரைய வீசியெறிஞ்சா
சிங்கியடிக்க கூட்டமிருக்கு
எம் மக்க கஷ்டம் போக்க
எங்காச்சும் ஆளிருக்கா
உழைச்சு தேஞ்ச கூட்டம்
உரிமைக்காக கெஞ்சுது
உண்டு திண்ணு பெருத்த கூட்டம்
உதவி செய்யாம நிக்குது
தண்ணீர் கேட்டு தவிக்கும் கூட்டம்
கண்ணீர் விட்டு கதறுது

எழுதியவர் : விவசாயி (27-Mar-17, 7:00 pm)
பார்வை : 117

மேலே