எண்ணிக் கசிந்துருகி

மழை தனைப் பார்த்து
கண்கள் பூத்து

வெய்யில் தனைக் கண்டு
விழிகள் சோர்ந்து

வற்றிய ஆற்றை நோக்கி
பார்வை தடுமாற

வறண்ட நிலத்தை நினைந்து
கண்ணீர் பெருக

வலம் வரும் தமிழனை
எண்ணிக் கசிந்துருகி

யாரை நிந்திக்க என்று புரியாமல்
மனம் நொந்து நிற்கிறேன்.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Mar-17, 7:32 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1389

மேலே