தாலாட்டும் வெண்ணிலவே - குறுங்கவிதை
தாலாட்டும் வெண்ணிலவே !!!
தாலாட்டும் வெண்ணிலவே !
தரையிறங்கி வாராயோ !
பாலூட்டும் பிள்ளைக்கும்
பரவசமாய்த் தோன்றுகின்றாய் !
உறங்குகின்ற இமைக்குள்ளே
உறவாடி நிற்கின்றாய் !
மறந்திடவும் முடியாமல்
மனையாளைத் தேடுகின்றேன் !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்