நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

உன் கண்களை தானே காண ஆசை கொண்டேன்,
ஆனால் அது வேறொருவளை நோட்டமிட்டதே...

உன் இதயத்தில் தானே குடியிருக்க வேண்டினேன்,
ஆனால் அதில் இம்மியளவும் எனக்கு இடமில்லையே...

உன் கரம் கோர்க்க விரும்பினனேன்,
அதில் உனக்கு உடன்பாடு இல்லையே...

உன் கால்தடத்தை பின்பற்றி நடக்க துணிந்தேனே,
அதன் முடிவு நெருப்பாக ஆனதே...

எனக்கு ஒரே சந்தேகம் தான்!!
உன்னுள் காதலே இல்லாமல் எவ்வாறு காதல் வார்த்தைகள் என்னிடம் பேச முடிந்தது???

நீ அழைத்தால் நான் கண்மூடி தனமாக வருவேனென்று நினைத்தாயோ??

என்னை விட்டுச் சென்றால் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??

உன் கோமாளி ஆட்டத்தில்
ஏமாறும் ஏமாளி நானல்ல...

திரை என்பது என் உடலுக்கும் முகத்திற்க்கும் தான்
என் பகுத்தறிவிற்க்கு அல்ல...

இறுதியாக எனக்கு ஒரு விருப்பம்,
உன்னை ஒருமுறை காண வேண்டும்!

நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும் என்று கூறுவதற்க்காக அல்ல,

நீ இல்லாததால் தான் பல வெற்றிகளோடு மகிழ்சியாக வாழ்கிறேன் என்பதை உணர்த்துவதற்க்காக!!!
---ஷாகி---

எழுதியவர் : ஷாகிரா பானு (28-Mar-17, 7:46 am)
பார்வை : 1228

மேலே