சதியால் மடிந்திட்ட சலம்

காட்டுத்தீ

பசுமை போர்த்திய பாறையே ஏன் தகிக்கின்றாய்?
பாவிகளின் பாழ்பாதம் பட்டுவிட்டதோ?
சூரியனது சுடுவெயில் சுட்டுவிட்டதோ?
மின்னலவன் மீச்சிறு கீற்று தொட்டுவிட்டதோ?
பச்சை மாமலை பாலைவனமாய் காட்சியளிப்பதேன்?
வான்மழையே உன்னை அணைத்திடாத போது-என்
கண்மழை கொண்டு என் செய்கேன்?

எழுதியவர் : (28-Mar-17, 8:12 am)
பார்வை : 117

மேலே