என்னவனே உன்னை
நகங்களுக்கும்
உள்ளங்கைக்கும்
மருதாணியிட்டேன்
விரல்களுக்கு மோதிரமிட்டேன்
கைகளுக்கு வளையலிட்டேன்
கழுத்திற்கு மாலையிட்டேன்
காதிற்கு கம்மலிட்டேன்
மூக்கிற்கு மூக்குத்தியிட்டேன்
நெற்றியில் பொட்டிட்டேன்
கூந்தலில் பூ சூடினேன்
கண்களில் மை தீட்டினேன்
கால்களில் கொலுசிட்டேன்
எத்தனை அணிகலன்
அணிந்தாலும்
என்னவனே உன்னை
அணிந்துகொள்ளும் போது
நான் அழகாகிறேன்
ஆனந்தமடைகிறேன்