தமிழ் மணக்கும்
வஞ்சியவள் கரங்களிலே வளைகுலுங்கும்
கஞ்சமலர் முகத்தினிலே களைபெருகும்
கொஞ்சிவரும் குரலிசையோ குளிரவைக்கும்
நெஞ்சிலவள் நினைவுகளே நிதமினிக்கும்!
திங்களொளி விழிகளிலே திகழ்ந்திருக்கும்
மங்கையவள் நடையழகோ மனம்மயக்கும்
பொங்கிவரும் சிரிப்பொலியோ பொலிவளிக்கும்
தங்கமகள் அவள்மொழியில் தமிழ்மணக்கும்!