தமிழ் மணக்கும்

வஞ்சியவள் கரங்களிலே வளைகுலுங்கும்
கஞ்சமலர் முகத்தினிலே களைபெருகும்
கொஞ்சிவரும் குரலிசையோ குளிரவைக்கும்
நெஞ்சிலவள் நினைவுகளே நிதமினிக்கும்!

திங்களொளி விழிகளிலே திகழ்ந்திருக்கும்
மங்கையவள் நடையழகோ மனம்மயக்கும்
பொங்கிவரும் சிரிப்பொலியோ பொலிவளிக்கும்
தங்கமகள் அவள்மொழியில் தமிழ்மணக்கும்!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Mar-17, 4:24 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 90

மேலே