கால மாற்றம்

நிலவை பிரிந்து
வானம் தேய்கிறது
இங்கே பூமி பொழிந்து
வானம் நனைகிறது
மரம் ஒன்று நிழல் தேடுகிறது
மண்ணில் முளைக்க வழியின்றி
விதைகள் தவிக்கின்றது
மீன்களும் கூடு கட்டுகின்றது
தன் குஞ்சுகளை அதில் வாழவைக்கின்றது
சிட்டுக்குருவிகள் எல்லாம்
அருவியில் குளிக்கிறது
அவைகள் நாடு பெயர்ந்து
காடு தேடுகிறது
மண்ணில் மனிதனின் ஆட்சி
சூழ்ச்சியானதால் வந்த
மாற்றங்கள் இவை..

எழுதியவர் : செல்வமுத்து.M (28-Mar-17, 11:57 pm)
Tanglish : kaala maatram
பார்வை : 236

மேலே