காதலெனும் மாயை தெளிந்தேன் ,கண்ணனைக் கண்டேன்

உன்னைக் கண்டேன்
என்னைக் கொடுத்தேன்
கலங்காதே கண்ணே
நீதான் எப்போதும்
என் இதயத்தில் என்றாய்
இதை உண்மை என்று நான்
எண்ணி இருக்கும் வேளையில்
நீ அறியாமல்
உன்னைக் கண்டேன்
வேறோர் கன்னியுடன்
இப்போது புரிந்தது
நீ யார் என்று
இன்னும் ஏமாற
நான் என்ன காதல் கிறுக்கியா
வாழ்க்கையில் போதும்
இந்த ஏமாற்றம் ஒன்றே
இந்த காதல்
எனைக் கரை சேர்க்காது
இனி வேண்டாம் காதலே
என் வாழ்வில்
என் இதயத்தில்
உனக்கேது இடம்
இப்போது பாதை தெரிந்தது
கரையும் தெரிந்தது
கண்களைக் கட்டிய
காதல் திரையும் அகன்றது
நான் இப்போது
தேடி அலைவது
என் கண்ணனை நாடி
அந்த பேரொளியை நாடி
அவனில் ராதையை நாடி
அதில் ஐக்கியமாக..........
இவ்வுலகில் காதல்
ஒரு மாயை ,மயக்கமே
காமன் தந்த
விரக தாபமே
இந்த காமத்தீ
இப்போது என்னுள் இல்லை
அணைந்து போயிற்று
அதோ புது பாதை
அங்கே தெரியுது

உண்மைக் காதல்
நீ அல்லவோ கண்ணா
நீதான் என் காதலன்
என் வாழ்வின் வழிகாட்டி
நீ ஆணும் அல்லன் பெண்ணும் அல்லன்
அலியும் அல்லன்
நீ ஓர் பேரொளி
உருவும் நீயே
அறிவும் நீயே
என்னை நீ ஏற்றுகொள்வாயோ
உன் மனதில் ராதையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-17, 4:16 pm)
பார்வை : 54

மேலே