சரணடைந்தேன் என் இறைவா

நான் எழுதிய கவிதையினை ஒரு பாடலாக கொடுக்கும் என்னுடைய முதல் முயற்சி. கீழே கொடுக்கப்பற்றிக்கும் youtube shortened link version தேர்வு செய்யவும் கவிதைக்கான இணைப்பு
https://youtu.be/lT1d_wrx0Gk

விழியில் பெருகிய நீரையெல்லாம்
இமைகள் திரையாய் தடுத்தனவே
பழியில் தெறித்த வார்த்தையெல்லாம்
இதயம் தாங்க மறுத்தனவே

நித்திரை வருமென்று
இரவெல்லாம் காத்திருந்தேன்
வரும்நேரம் எனைமறந்து
உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்

வழியறியாது தவிக்கையிலே
சரணடைந்தேன் என்இறைவா
உன்பாதங்களில் பொற்பாதங்களில்
- ராஜேந்திரன் சிவராமபிள்ளை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Mar-17, 4:41 pm)
பார்வை : 90

மேலே