பார்வையற்றோர் தேர்வு எழுத தோழனை அழைத்து ஒரு கவிதை

எங்கள் இமைகள் திறக்க
விழிகள் கொண்டு
வரும் தோழனே
வருக வருக...

எங்கள் விழிகளுக்கு வெளிச்சம்
கொண்டு வரும் தோழனே
வருக வருக....

எங்கள் மொழிகளுக்கு வார்த்தை
கொண்டு வரும் தோழனே
வருக வருக....

எங்கள் ஒலியை ஒளியாய்
மாற்ற வரும் தோழனே
வருக வருக....

எங்கள் ஓசையை இசையாய்
மாற்ற வரும் தோழனே
வருக வருக....

எங்கள் எழுத்தை தலையெழுத்தாய்
எழுத வரும் தோழனே
வருக வருக....

எங்கள் நம்பிக்கையை வாழ்க்கையாய்
தர வரும் தோழனே
வருக வருக....

எழுதியவர் : இதயவன் (29-Mar-17, 11:23 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 133

மேலே