விசித்திர பறவை

எண்ணங்களுக்கு சிறகுகள்
அமைத்து பறந்தபடி
நான்

கீழிறங்க ஆசையில்லை
பரவச நிலையிலேயே
வாழ்வின் பழரசம் பருகுகிறேன்

இங்கிருக்கும் கட்டுப்பாடுகளை
தாண்டி
கூண்டுகளைத் தாண்டி
என் சிறகுகளை விரித்துக் கொண்டிருக்கின்றேன்

எதுவும் வேண்டாம்
இறக்கும் நிலையிலும்
கண்களுக்குள் கவி எழுதிக்கொண்டிருந்தால்
அதுபோதும் எனக்கு

நான் சமூக சங்கிலிகளுக்கு
அப்பாற்பட்ட பறவை
நான் பந்தங்களுக்குள் பங்கு
கேட்காத விசித்திர பறவை

சுதந்திரம் எனது
மனவுரிமை
நான் கவிகளோடு வாழ்கிறேன்
கவிகள் எனக்குள் சுகமாக வாழ்கின்றன

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (30-Mar-17, 9:29 am)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : suthanthiram
பார்வை : 87

மேலே