நீல நிற நித்திரை வானம்
மேகக்கடலில் படுத்துறந்கும் வானவில் பாயில் கோடை விடுமுறை கொண்டாடும் நீலஎழில்வானம்
ராகதேவதைகள் மழைத்துளி ஒளியினை எடுத்து வெண்ணிலவுக்கு நெஞ்சாற நிலவாராதனை செய்யும்
படுத்துறங்கும் நீலவானம் புரண்டு திரும்ப வானவில் பாயும் கலைந்து மீண்டும்சேரும்
விடுபட்ட துயிலில் கொட்டாவிவிட்டு மீண்டும் தூங்கி கோடைவிடுமுறை கொண்டாடும் நித்திரைவானம் !
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முஹம்மது சர்ஃபான் கருத்தில் சொன்ன கவித்துவ வரியை முதலடியாகக் கொண்டு
எழுதிய கவிதை .
நன்றி சர்பான்
----கவின் சாரலன்