கண்ணம்மா

யார் இந்த கண்ணம்மா?

கண்ணம்மா
எப்பொழுது நான் உன்னை பார்ப்பேன்
எப்பொழுதும் உந்தன் நியாபகம் தான்

உன்னை சுமக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னால் நான் பரிபூரணமாக வேண்டும்

கண்ணம்மா
எனக்காக
என் தாய்க்காக
அதாவது என் இரண்டாவது தாயான என் அக்காவிற்காக
எனக்கு மகளாய் வந்து பிறந்து விடு தாயே
அம்மா என்று நீ அழைக்கும் நாளிற்காய் ஆவலாய் காத்திருக்கிறேன்

அக்காவிற்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்
எனக்கும் தான்
அவர்களும் உனக்கு தாய் தான்
என் தாய் உனக்கும் தாயாவாள்
என் சேய் உனக்கும் சேயாவாள்


கண்ணம்மாவிற்காக
என்ன நீ செய்வாய் என்று நீ கேட்டால்
கண்ணம்மாவிற்காக எதுவும் செய்வேன்
என்பது தான் பதில்

கண்ணம்மாவை எந்த அளவிற்கு பிடிக்கும் என்றால்
கண்ணம்மாவை உச்சி முகர்ந்து
ஆரத்தழுவி
கண்ணம்மா மடியிலேயே என் உயிர் போக வேண்டும்


முடியாத முற்றுப்புள்ளி நீ கண்ணம்மா

யாரும் அறியாத என் அழுகை நீ கண்ணம்மா
நீ மட்டும் அறிவாய் என் கண்ணீரை
நீ மட்டும் போதும் என் கண்ணீரை துடைக்க

எல்லோரும் அறிந்த என் மகிழ்ச்சி நீ கண்ணம்மா

கண்ணம்மா
ஓரிடத்தில் ஓய்பவள் அல்ல
கண்ணம்மா ஒரு காற்று
எங்கும் நிறைந்தவள்
என்றைக்கும் எந்தன் சுவாசம் அவள்

கண்ணம்மா மிகவும் நல்லவள்
மனசாட்சி கொண்ட மனிதினி அவள்
அவள் அவள் பாதையில் செல்வாள்
யாருக்கும் அவளால் தொல்லை இல்லை
எல்லோருக்கும் அவளால் நன்மையே

கண்ணம்மா
அம்மா
உன்னை பார்க்க ஆவலாக உள்ளேன்
சீக்கிரம் என்னிடம் வா கண்ணம்மா
உனக்காகவே காத்துக்கொண்டிருக்கும் உந்தன் அம்மா

~ கண்ணம்மாவின் அம்மா (பிரபாவதி வீரமுத்து )

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Mar-17, 7:26 am)
Tanglish : kannamma
பார்வை : 3321

மேலே