இதயவெளியில் கவிதை அல்லிக்குளம்

வான்வெளியில் நடக்கும் நிலவுப்பிம்பம்
மனவெளியில் நடமிடும் பூவசந்தம்
இரவொளியில் மின்னிடும் நட்சத்திரம்
இதயவெளியில் கவிதை அல்லிக்குளம் !

இது மூன்று சீர் கொண்ட நாலடி "வஞ்சி விருத்தம் "
என்பதை நீங்கள் அறிவீர்கள் .
இதை நாச்சீர்" வெண்பா "ஆக்குவோம் .


வான்வெளி யில்நடக்கும் வெண்நிலாப் பிம்பம்
மனவெளி தன்னில் விரியும் வசந்தம்
இரவொளியில் மின்னிடும்நட் சத்திரக் கூட்டம்
இதயவெளி அல்லிக் குளம் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-17, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே