ரோஜா வீதி
விழிதிறந்தால் விடியும் காலை
விழிமூடினால் கவியும் அந்திமாலை
மொழிபேசினால் பைந்தமிழ்ப் பாடல்
குழல் கலைந்தால் கார்முகிலாடல்
விழித்தென்றலே நீநடந்தால் அந்தவழி
விழிவழி நடக்கும்எனக்கு ரோஜாவீதி
விழிதிறந்தால் விடியும் காலை
விழிமூடினால் கவியும் அந்திமாலை
மொழிபேசினால் பைந்தமிழ்ப் பாடல்
வழிநடந்த உன்பாதை ரோஜாவீதி
---இன்னோசை வரிகள் வஞ்சி விருத்தமாக .
----கவின் சாரலன்