அம்மாவின் முத்தம்
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
செம்பொன் சிலையழகில் செஞ்சுவைத் தேனெடுத்து
செம்புனல் ஊற்றெங்கும் செங்கதிராய்ப் பாசமீந்து
அம்புலியின் மென்குளிரில் அன்னையின் சிற்றிதழ்
தம்கரத்தி லேந்தித் தரும்முதல் முத்தொன்று
எம்மு யிருக்குள் இனித்து......