கடல்

கடலின் அலைகள் கரையை காணுவது
நம் கனவை நிறைப்பதற்க்கா?

இல்லை,
அதன் கனவை கரைப்பதற்க்கா?

கடல் ஆழமானவை - அதில்
ஆயிரம் அடங்கும்!
கடல் பழைமையானவை - உலகின்
பொருளை விளக்கும்!

சூரிய ஔி படா இடம்
உலகில் இரண்டு இடம்!

பூமிரின் அடிபுறமும்
கடலின் ஆழமும்!

கடல் சக்தி வாய்ந்தது!

எத்தனை சாம்ராச்சியம்
அதனுள் அடங்கி உள்ளது!

எத்தனை தங்கங்கள்!
எத்தனை வைரங்கள்!
எல்லாம் பதுக்கி வெறும்
தண்ணீர் மட்டுமே காட்டுகிறது!

ஓ!
உலகிற்க்கே தண்ணீர் காட்டியது
கடல் தானோ?

கடற்கரை வந்தால்
காற்றில் ஈரம் சேறுதே!!

கடல் மெல்ல அழுததோ?
அலைகள் நுரையாய் போனதை
எண்ணி அழுகுதோ?

வாழ்வின் கரையை நோக்கி
மனிதர் போவது போல
நிலத்தின் கரையை நோக்கி
அலைகள் வருவது ஏன்??

நம்மை போலவே அதற்கும்
கனவுகளும், வலிகளும்
இருந்திருக்கும்!

போதும் அலையில் நனைந்த
கால்களை எடுங்கள்!
கடலின் கனவுக்கு சற்று
வழிகளும் விடுங்கள்!

எழுதியவர் : (5-Apr-17, 8:09 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : kadal
பார்வை : 262

மேலே