எங்கே சென்றாய்

உன் புகழ் மட்டும் இங்கே இருக்க
நீ மட்டும் எங்கே சென்றாய் எங்கள் சாமியே

காலங்கள் சொல்லும் உன் புகழினை
பல மஞ்சுவிரட்டு களங்கள் சொல்லும்
உனது புகழினை

உனது நினைவுகள் நெஞ்சில் நிலைக்கும்
நீ எங்கே சென்றாய் என்று நினைத்தாலே
எங்கள் நெஞ்சம் வதைக்கும்

இந்த மண்ணுலகத்தில் உன் புகழ்
போதும் என்று இறைவன் நினைத்ததினாலோ

விண்ணுலகத்தில் உன் புகழ் பறக்க
உன்னை அழைத்து சென்றானோ

இறைவனடி சேர்ந்த எங்கள் இறைவனாய் நீ இருக்க
என்றும் உனது நினைவுகளுடன் நாங்கள்............,

இப்படிக்கு : கு.ரமேஷ்

எழுதியவர் : ரமேஷ் (6-Apr-17, 10:57 pm)
Tanglish : engae senraai
பார்வை : 1081

மேலே