பி-ரி-வு

இமை வியர்த்து வியர்த்து
உன்னை அழித்திடுமோ

இல்லை

இமைத்து இமைத்தே
களைத்திடுமோ

நிறமில்லா கண்ணீர் தான்
நிரந்தரமோ

இல்லை

உன் நினைவிலே கரைந்து
உரைந்திடுமோ

கனவில்லா காலையாய்
விடிந்திடுமோ

இல்லை

நீ இல்லா நாட்களாய்
நகர்ந்திடுமோ

எல்லை இல்லா காதலாய்
நீன்டிடுமோ...

இல்லை

உன் காதல் இன்றி நெஞ்சம்
இருந்திடுமோ

இல்லை

உடல் விட்டு உயிர்தான்
பிரிந்திடுமோ.......

எழுதியவர் : யோபாலா (8-Apr-17, 11:48 pm)
சேர்த்தது : பாலாசுப்ரமணி மா
பார்வை : 137

மேலே