உயில்
உன் விழியசைவில்
துடிக்கிறதடி
என் இதயம்...
வெயிலில் கூட உருகாமலிருந்த என்னை
உன் நுனி விரல் தீண்ட
மொத்தமாய் கரைந்துபோனேனடி...
விலகிநடக்கும் நிழலாக
அல்லாமல்
நிஜமாக என்னில் புதைந்துபோக
நீ வேண்டுமடி,
கேள்விக்குறியான
கனவாக அல்லாமல்
என் இரு கண்ணாக
நீ வேண்டுமடி...
உன்னை தேடிதேடி நான் தொலைந்தாலும் என்னிலே
ஒளிந்து கொள்ள நீ வேண்டுமடி...
உன் இதழ் முத்தத்தை மட்டும்
என் கன்னத்துக்கு பிச்சைப்போடு உயிரைக்கூட
உயில் எழுதுகிறேன்
உன் பெயரில்!!!
#ஸ்ரீதேவி#