காதல் உலா
என்னவனுடன் உலா சென்றேன்.
வானமும் நாணம் கொண்டு மேகத்திரையினுள் ஒளிந்து எங்களை ரசித்தது...
சூரியனும் வானத்தை திரையாக்கி மறைந்து கொண்டு எங்களை கவனித்தது...
மரங்களும் மகிழ்வு கொண்டு பூக்களை எங்கள் மீது தூவியது...
பூமியும் எங்களை தாங்கி நிற்பதில் பெருமை கொண்டு பூரித்தது...
குளிர் காற்றும் எங்களுடன் கைக்கோர்த்து விளையாடி சென்றது...
மழைத்துளி ஒவ்வொன்றும் எங்களை தொட்டு தளுவிய களிப்பில் மண்ணில் கலந்தது...
இயற்கையும் எங்களை இணைக்கின்றன.அதனால்,
இம்மியளவு எனக்கு கர்வம் இருப்பதில் தவறில்லையே!!!