என்னவன் நீ

கவிதையிலும் என் கனவிலும் வாழ்பவன் நீ
எனதுயிரிலும் என் உணர்விலும் இருப்பவன் நீ
வார்த்தையிலும் என் வாசகத்திலும் நிறைபவன் நீ
உள்ளத்திலும் என் எண்ணத்திலும் தோய்பவன் நீ
கண்களிலும் அதன் காட்சியிலும் தெரிபவன் நீ
என் கனவிலும் எனைத் திருடும் கள்வன் நீ
என் கவிதை வரிகளில் நிறைந்த தலைவன் நீ
என் எண்ணத்தில் ஓடும் நிழற்படம் நீ
என் காட்சியின் கருவாய் உறைபவன் நீ
இமைகளின் காவலில் பொத்தி வைத்த
கண்களை ஒரே நொடியில் உன் வசம் ஈர்த்த வஞ்சகன் நீ
நெஞ்சுக் கூண்டில் சிறை வைத்திருந்த இதயத்தை ஒரே பார்வையில் களவாடியக் கயவன் நீ
எனக்கே தெரியாமல் என்னுள் வாழும் அன்புக் காதலன் நீ
என்றும் எனை நீங்கா என்னவன் நீ

எழுதியவர் : தமிழ் ப்ரியா (12-Apr-17, 2:36 pm)
Tanglish : ennavan nee
பார்வை : 1551

மேலே