உன் இதழ் உதிர்த்த வார்த்தைகளில் மகிழ்ச்சி

என்
காதல்
கவிதை
நினைவு
கனவு
உயிர்
உணர்வு
சிந்தனை
செயல்

அத்தனையும் நீதானடி ! என்னிடம் பேசு !
ஏன் இப்படி மௌனமாய் இருக்கிறாய்,
என்னை விட்டு போய் விடாதே
என்று உன் விழி பார்த்து
இதயம் மௌனமாய் தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தது !

சட்டென்று உன் இதழ் உதிர்த்த வார்த்தைகளில்
இதயம் இயல்பு நிலைக்கு திரும்பியதில் அவ்வளவு
மகிழ்ச்சி !

" உன்ன விட்டு எங்கடா போகப்போறேன் லூசு "

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (13-Apr-17, 9:37 am)
பார்வை : 137

மேலே