தமிழ் கலாச்சாரம்

தமிழன்தான் தரணியில் தலைப்பிள்ளை
தமிழ்தான் மொழிகளிலே கிளிப்பிள்ளை
அன்றுமுதல் இன்றுவரை இளைப்பில்லை
அண்டம்யாவும் ஆண்டபோதும் களைப்பில்லை.

இலக்கணங்கள் இலக்கியங்கள் இயற்றி வைத்தார்.
இறைவணக்கம் மொழிவணக்கம் பாட்டில் வைத்தார்.
அகமெனவும் புறமெனவும் இவ்வுலகை வகுத்தார்.
அவ்விரண்டும் அகலாது இல்வாழ்க்கை வாழ்ந்தார்.

காதல்வீரம் நட்புஈகை பண்பாட்டு கூறுகளாம்.
மோதல்சாதல் கோபபகை பண்பாட்டுக் கீறுகளாம்.
பொதுமறையொன்றே போதும் அறவாழ்க்கைக் கழகாம்.
கம்பன் கவியழகே போதும் அறிவுடையார்க் கழகாம்.

ஆயிரமாயிரம் அறிஞர் வருவார் இம்மண்ணில்
அவரவர் தமிழர்தமிழ் புகழ்சேர்ப்பார் அவ்விண்ணில்
தமிழ்நூல்கள் எல்லாம் செயற்கைகோள்கள் ஆகட்டும்.
தனித்தமிழ் திருப்புகழ் பூமிவிட்டும் போகட்டும்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 11:50 am)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 251

மேலே