அம்மா
என்தாய்
என்னை வித்தாய் வாங்கினாய்;
உதரத்தில் முத்தாய் தாங்கினாய்;
உன் உதிரமே உணவாய்;
நாளும் எனக்கு ஊட்டினாய்;
உயர்பண்புகளை உள்ளெங்கும்
உதிராது தீட்டினாய்;
மெத்தையில் கிடத்தினாய்;
முத்தத்தை உடுத்தினாய்;
வளர்ந்தாய்; வளர்த்தாய்;
எனக்காய்
உழைத்தாய்; இளைத்தாய்;
எனக்காய் பிறந்தாய்;
அனைத்தும் துறந்தாய்;
அன்பாய்; தீமைகள் தழுவும்போது அம்பாய்;
அத்தனையும் அளித்தாய்; என்
அகிலத்தின் ஒளித் தாய்;
தாயே!
இம்மையில் எனை பிள்ளையாய் ஈன்றெடுத்தாயே...
எம்மையிலும் எனையே பிள்ளையாய் ஈன்றெடு தாயே...