கைப்பேசி

கைப்பேசி கீழே விழுந்து செயலிழந்த பின் புதியதாக ஒன்று வாங்குவது என்ற முடிவாக, ஓன் லைனில் நம் தேவை வசதிக்கேற்ற ஒன்றைத் தேர்வு செய்து ஓர்டர் செய்தாகி விட்ட பின்தான் என் மண்டையில் உதித்து அந்த முக்கியமான விடையத்தைப் பற்றி எங்கும் குறிப்பிட வில்லை என்று...
மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்ட வசமாக ஒரே நாளில் வந்துவிட்டது. வந்து எல்லாம் பொருத்திக் கொண்டிருந்தபோது மாப்பிள்ளை வர அவர் பார்த்து நல்ல ஃபோன் தன்னுடையது போல் ஆனால் வேற கம்பெனி என்றார். அவரிடம் என் கவலையைப் பற்றி கூற சற்றே கூச்சம். அவரும் ஃபோனை வாங்கி பேத்தியை ஒரு படம் பிடித்தபின் நல்ல காமெரா என்றார்.. படங்கள் தெளிவாக இருக்கும் என்றார்... மனசுக்குள் அந்தக் கேள்வி குடைந்து கொண்டே இருந்தாலும் கேட்கவில்லை...

அவர் சென்றபின் மனைவியின் கைப்பேசி எடுத்து இதற்கு ஒரு அழைப்பு விடுத்தேன்..

மணி அடித்தது. இரு காதிலும் வைத்துப் பேச, கேட்டது.. இதிலிருந்து அதற்கு ஒரு அழைப்பு விடுத்தேன். அதிலும் அடிக்க பேச, கேட்க முடிந்தது..
இப்பொழுதுதான் மனதிற்கு சற்று நிம்மதி..

ஃபோனைப் பற்றிய விவரங்களில் ஒரு வார்த்தை கூட அதன் மூலம் அழைத்தும், மற்றவர் அழைத்தால் பேசவும் முடியும் என்று குறிப்பிடவில்லை!!

-----முரளி

எழுதியவர் : முரளி (15-Apr-17, 9:14 am)
சேர்த்தது : முரளி
Tanglish : kaippesi
பார்வை : 425

மேலே