இன்னும் எத்தனையோ கவிதைகள்

மயில் இறகு இமைகள் !
மையிட்ட விழிகள் !
மயக்கும் பார்வைகள் !

தேன் கலந்த செவ்விதழ்கள்
தேன் சிந்தும் புன்னகைகள் !

தெவிட்டாத வார்த்தைகள்
திகட்டாத முத்தங்கள் !

ஆப்பிள் கன்னங்கள் -மிதமாய்
கடிக்க தோன்றும் என் எண்ணங்கள் !

செவ்விளநீரில் என் சிந்தை மயக்கங்கள் !

சிறு சிறு அரும்புகளாய் மலர் முகத்தின்
முகப்பருக்கள் !

சீறும் கோபப்பார்வை கணைகள் !

இன்னும் எத்தனையோ உனக்கென என் கவிதைகள் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (15-Apr-17, 9:51 am)
பார்வை : 314

மேலே